திருமங்கலம் அருகே பரபரப்பு ! காா் மோதி பெண் பலி !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி கலாவதி(44).கலாவதி ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு தன்னுடைய மகளை பார்ப்பதற்காக கணவர் தம்பி கோடீஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே ஆலம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி தரதரவென காரில் மாட்டி இருசக்கர வாகனம் இழுத்து வந்துள்ளது மேலும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கண்ணிமைக்கும் நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி நோக்கி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது கார் அடுத்தடுத்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கலாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் கலாவதி கொழுந்தன் கோடீஸ்வரன் காயமடைந்தார் காரில் வந்த ஒரு நபரும் காயம் அடைந்துள்ளார் தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News