தமிழகம்
வெடித்து சிதறிய டேங்கர் லாரி ! பரிதாபமாக உயிரிழந்த கூலித்தொழிலாளி !
கோவை மலுமிச்சம்பட்டி அருகே செயல்பட்டு வந்த வெல்டிங் கடை ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்த வெல்டிங் கடைக்கு வேதிப்பொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஒன்று வெல்டிங் பணிக்காக கொண்டு வரப்பட்டது. இதற்கான பணியை இரண்டுநாட்களாக செய்து வந்த கடை பணியாளர்கள் , இன்று காலை மீதமுள்ள பணியை முடிக்க திட்டமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து , லாரியின் மேற்பகுதி மூடியை திறக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களால் அதனை திறக்க முடியாமல் போகவே வெல்டிங் வைத்து திறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக லாரியில் உள்ள டேங்கர் வெடித்து சிதறியது
இச்சம்பவத்தில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் , இதுகுறித்து காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.