தென்னிந்திய நடிகர்களில் நடிகர் விஜய் தான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. அதனை பிரபல நடிகர் முறியடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா உடன் அல்லு அர்ஜுன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். புஷ்பாவுக்கு பின் கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் பாலிவுட் திரையுலகில் கால் பதிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார்.