சினிமா
பிரபல நடிகை தற்கொலை! சினிமா உலகினர் அதிர்ச்சி!
Published on
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கரமனா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில், மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை அபர்ணா நாயர் என்பவர் தங்கி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று மாலை 7.30 மணிக்கு, தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம், கேரள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue Reading
Related Topics:abarna nair, rip, suicide