Connect with us

Raj News Tamil

முதல் மனைவியை 29 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது திருமணம் செய்த பிரபல நடிகர்!

இந்தியா

முதல் மனைவியை 29 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது திருமணம் செய்த பிரபல நடிகர்!

நா தான் கேஸ் கொடு என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் சி.சுக்கூர். இவருக்கு ஷீனா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 2-வது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் கலந்துக் கொண்ட அவரது 3 மகள்களும், சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளனர். இவரது இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும், அம்மாநிலத்தில் எழுந்துள்ளது. அதாவது, முஸ்லீம் தனிநபர் சட்டங்களின்படி ஆண் வாரிசு இல்லாத நிலையில், குடும்பத்தின் சொத்தில் 3-ல் ஒரு பங்கு, சகோதரர்களின் குடும்பத்திற்கு செல்ல வேண்டும்..

எனவே, தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், தனது சொத்தில் ஒரு பங்கு, சகோதரர்களின் குடும்பத்திற்கு செல்லக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மையுடன் தான், அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சிலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top