Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“மொட்டை மாடியில் தங்கணும்” – ஆசையாய் கேட்ட மகள்! கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

இந்தியா

“மொட்டை மாடியில் தங்கணும்” – ஆசையாய் கேட்ட மகள்! கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் ராமானுஜர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், ராமானுஜரின் மகள்கள் மொட்டை மாடியில் தங்க வேண்டும் என்று, கடந்த 18-ஆம் தேதி அன்று, தந்தையிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், இதற்கு அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், மகள்களுக்கும், ராமானுஜருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது மகள்களை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். அப்போது, அருகில் இருந்த அவரது மனைவி ரேகா, கத்தியால் தாக்கப்பட்டு, காயம் அடைந்துள்ளார்.

இருப்பினும், அமைதி ஆகாத அவர், தனது மகளை துரத்தி துரத்தி கத்தியால் குத்தினார். இவ்வாறு 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயம் அடைந்த ராமானுஜரின் மகள், பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறிய தகராறில், மகளையே தந்தை கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top