Connect with us

Raj News Tamil

கழிவுநீர் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு..!

தமிழகம்

கழிவுநீர் லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு..!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட்(55). இவரது மகன் சாமுவேல் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றிரவு ராபர்ட்டும், சாமுவேலும் நுங்கம்பாக்கத்தில் இருந்து மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

மதுரவாயல் – நொளம்பூர் சர்வீஸ் சாலை தரைப்பாலம் அருகில் செல்லும் போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கழிவுநீர் லாரி ஒன்று ராபர்ட் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராபர்ட், சாமூவேல் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போக்குவரத்து போலீஸார், தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். தந்தை, மகன் என இருவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top