Connect with us

Raj News Tamil

3 நாட்களாக காய்ச்சல்! – தீடிரென உயிரிழந்த 12வயது சிறுவன்!

தமிழகம்

3 நாட்களாக காய்ச்சல்! – தீடிரென உயிரிழந்த 12வயது சிறுவன்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறு நெசலூர் என்ற பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் அகிலேஷ்(12). ஏழாம் வகுப்பு படித்து வந்த அகிலேஷுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென்று அகிலேஷின் உடல் ஜில் என்று இருப்பதை கண்டு அஞ்சிய பெற்றோர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அகிலேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அகிலேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காய்ச்சல் வந்து மூன்றே நாட்களில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top