Connect with us

Raj News Tamil

தக்காளியினால் ஏற்பட்ட சண்டை! பிரிந்து சென்ற குடும்பம் !

இந்தியா

தக்காளியினால் ஏற்பட்ட சண்டை! பிரிந்து சென்ற குடும்பம் !

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். சிற்றுண்டி கடை நடத்தி வரும் இவர்.தன் மனைவி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். அப்போது, சமையலுக்காக சஞ்சீவ் தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி,என்னிடம் கேட்காமல் தக்காளியை பயன்படுத்திவிட்டதற்காக கோபமடைந்துள்ளார்.இதனால் ,இருவரின் வாக்குவாதமும் பெரிதாகி பிரச்சனையில் போய் முடிந்தது,இதனால் கோபமடைந்த சஞ்சீவின் மனைவி தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் ,தன் மனைவி வீட்டிற்கு வராததால் ,அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் ,போலீசார் சஞ்சீவின் மனைவியையையும் ,மகளையும் தேடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top