விஷாலுக்கு வந்த புதிய சிக்கல் – திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் நிதி பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டதாக விஷால் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

விஷால் தலைவராக இருந்தபோது சங்கத்திற்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்த குற்றச்சாட்டிற்கு விஷால் பதிலளிக்காத நிலையில், விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஷாலை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்தப் பிறகே பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News