“அண்ணா.. விட்ருங்க அண்ணா..” – ஜூனியர் மாணவர்களை அடித்து துன்புறுத்திய சீனியர்கள்!

கல்லூரியில் புதியதாக இணையும் மாணவர்கள், ஏற்கனவே படித்து வரும் சீனியர் மாணவர்களால், அச்சுறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியா முழுவதும் உள்ள இந்த பிரச்சனையை தடுப்பதற்கு, பல்வேறு வழிமுறைகளை, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த ரேகிங் தொல்லை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள எஸ்.எஸ்.என் என்ற கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நஸ்ராராவ் பகுதியில், எஸ்.எஸ்.என். என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், படிக்கும் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்கள் உறங்கும் ஹாஸ்டலுக்கு, நள்ளிரவில் வந்துள்ளனர்.

பின்னர், அவர்களை தங்களது அறைக்கு அழைத்து சென்ற சீனியர்கள், கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, YSR காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில், மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து, தற்போது உள்ள அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News