இந்தியா
எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)