Connect with us

Raj News Tamil

பாட்டாசு ஆலையில் வெடிவிபத்து! – 2 பேர் உயிரிழப்பு!

தமிழகம்

பாட்டாசு ஆலையில் வெடிவிபத்து! – 2 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ஆர் ஆர் நகர் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை மருந்து கலவையின் பொழுது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top