Connect with us

Raj News Tamil

பட்டாசு ஆலையில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

தமிழகம்

பட்டாசு ஆலையில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த அறையில் 15 பேர் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், தயாரித்த பட்டாசுகளை பரிசோதித்து பார்த்தபோது, இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in தமிழகம்

To Top