Connect with us

Raj News Tamil

தொடரும் பட்டாசு ஆலை தீ விபத்து! அரியலூரில் 7 போ் பலி!

தமிழகம்

தொடரும் பட்டாசு ஆலை தீ விபத்து! அரியலூரில் 7 போ் பலி!

அரியலூர் அருகே நாட்டு பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகளில் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் பகுதியில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றியூர் அருகே ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஊழியர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் உள்பட வாகனங்கள் எரிந்து சேதமாகின. மேலும் பலர் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி இருக்கலாம் என அச்சம் இருந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா் .இந்நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற பட்டாசு குடோன் தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே அடுத்த விபத்து நடைபெற்றுள்ளது அப்பகுதியினாிடயே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top