Connect with us

Raj News Tamil

திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழகம்

திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த கனமழை மற்றும் காற்றின் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயல் பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து நிருபர்களை சந்தித்த அவர் “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும், மீனவர்களுக்கான மானிய டீசலை உயர்த்தி வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழகம்

To Top