தமிழகம்
5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! கோவில் திருவிழாவில் நடந்த சோகம்
சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினார். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 5 பேரும் தன்னார்வலர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
You must be logged in to post a comment Login