Connect with us

Raj News Tamil

வெள்ள நிவாரணம்; 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகம்

வெள்ள நிவாரணம்; 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திபில் கூறியதாவது கூறுகையில்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவியாக ஒரு குடும்பத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

எண்னூர் பகுதிகளில் ரசாயன கலவு குடிநீரில் கலந்து உள்ளது இதனால் மக்களுக்கு தோல் வியாதி, கண் வியாதிகள் போன்ற வியாதிகள் வருகின்ற காரணத்தினால் அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்கின்ற வகையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்.

அம்மா அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டமன்ற நடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை ஏற்கனவே வழங்கி இருக்கிறார்கள் அதன் அடிப்படையில் நாங்களும் ஒரு மாத சம்பளத்தை நிவாரண உதவியாக வழங்குவோம்.

சென்னை மாநகரத்தில் இருக்கின்ற அனைத்து பகுதிகளிலும் இன்னும் வெள்ளம் வடியவில்லை, நிவாரண பொருட்களும் அந்த மக்களுக்கு சரியாக சேரவில்லை என்பதுதான் உண்மையான நிலை எனக் கூறினார்.

More in தமிழகம்

To Top