உலகம்
மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 141 பேர் உயிரிழப்பு..!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ தலை நகர் கின்ஷாவில் கடந்த திங்கட்கிழமை கனமழை பெய்தது. இந்த கனமழை அடுத்த நாள் காலை வரை நீடித்தது. இதனால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில், தரைப்பாலங்கள், சாலைகள், வாகனங்கள், விலங்குகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனை தொடர்ந்து அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கிய 141 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரது வீடுகள் மண்ணில் புதைந்தது.
![latest tamil news](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/12/Floods-in-Kinshasa-kill-141-people.jpg)
கின்ஷாசாவை நாட்டின் முக்கிய துறைமுகமான மாதாடியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)
You must be logged in to post a comment Login