Connect with us

Raj News Tamil

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடியாக உயர்ந்த பூக்களின் விலை..!!

வணிகம்

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடியாக உயர்ந்த பூக்களின் விலை..!!

ஆடி அமாவாசை தொடங்கியதில் இருந்தே பூக்கள் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல், கனகாமரம் பூ கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.300-க்கும், முல்லைப்பூ ரூ.150 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.450-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவாக உள்ளதால் இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வணிகம்

To Top