தமிழகம்
கெட்டுப்போன 150 கிலோ சிக்கன்..அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 கிலோ சிக்கன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
இதுவரை நெல்லை மாநகர பகுதிகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் முறையாக பராமரிக்கப்படாத 150 கிலோ சிக்கன்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.