Trending
கால்பந்து வீரர் பிரியா வழக்கு..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு..!
சென்னை வியாசார்பாடியை சேர்ந்தவர் 17-வயது கால்பந்து வீரங்கனை பிரியா. தவறான சிகிச்சை வலது கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இவர், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டும் நேற்று காலை 7.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் மெத்தனப்போக்கு காரணமாக உயிரிழந்த பிரியாவுக்கு, பொதுமக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. மேலும் இதற்கு காரணமான எலும்பியல்துறை மருத்துவர்கள் இருவரை பணி இடைநீக்கம் செய்து அறிவித்தது.
இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட சோமசுந்தரம், பால்ராம் சங்கர் தலைமறைவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களின் சென்போன் எண்களும் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
You must be logged in to post a comment Login