பாமக முன்னாள் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு – சிறுவன் உட்பட 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். பாமக முன்னாள் பிரமுகரான இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை அரிவாளால் சரமாடியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பாமக முன்னாள் பிரமுகர் சங்கரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சதீஷ், முகிலன், ராஜ்கிரண் உட்பட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News