ஆந்திராவில் தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தீபாவளி பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று (அக்.23) நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.