சினிமா
மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி? ஏன் தெரியுமா?
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இன்று இருவரும் ஒன்று சேர்ந்துள்ளதாக, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விமல் நடிக்கும் சார் என்ற படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
இந்த பாடலை, ஜி.வி.பிரகாஷ் குமாரும், சைந்தவியும் தான் இணைந்து பாடியுள்ளனர். நிஜ வாழ்க்கையில் அவர்கள் பிரிந்திருந்தாலும், பாடலின் வழியாக ஒன்றிணைந்து உள்ளனர்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று தங்களது விருப்பங்களை கூறி வருகின்றனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)