இந்தியா
ஜி20 உச்ச மாநாடு: பிரதமர் மோடி முன்பாக ‘பாரத்’ என பெயர்ப்பலகை!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது.
ஜி20 உச்சிமாநாடு தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் முன்பும் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி இருக்கை முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என வைக்கப்பட்டுள்ளது.