Connect with us

Raj News Tamil

போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்..!!

தமிழகம்

போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்..!!

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே பைக்கில் வந்த 3 பேர் எதிரே வந்த இன்னொரு பைக் மீது மோதிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த 3 பேரும் திருத்தணி மேட்டு தெரு பகுதியில் கஞ்சா போதையுடன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அப்பகுதி பொதுமக்களை மிரட்டி உள்ளனர். மேலும் ரோட்டில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கஞ்சா போதையில் ரகளை செய்த 3 பேரையும் தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல், கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

More in தமிழகம்

To Top