தமிழகம்
மருத்துவமனையில் கஞ்சா போதை ஆசாமிகள் ரகளை..மருத்துவர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மதுவும் கஞ்சாவும் ஒரே நேரத்தில் அருந்திய இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் கஞ்சா இளைஞர்களுக்கு கை கால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
ரகளையில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். மேலும் இந்த இரண்டு இளைஞர்களும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை தாக்கியும் ரகளையில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை ஊழியர்களையும் மருத்துவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் கஞ்சா இளைஞர்களை அடக்க முற்பட்டனர். கஞ்சா இளைஞர்களை அமர வைத்து சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனாலும் கஞ்சா இளைஞர்கள் மது போதையில் சிகிச்சை அளிக்க ஒத்துழைக்காமல் தொடர்ந்து ரகலையில் ஈடுபட்டதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள் மருத்துவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.