தமிழகம்
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கஞ்சா ஆசாமி ! மூன்றாவது முறையாக புகார் அளித்த பெண் !
திருப்பத்தூர் அருகே திருமணமான இளம் பெண்ணிற்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி களர்பதி வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் கூலி வேலைக்கு வெளிநாடு சென்றுள்ளார். இவர் மனைவி லாவண்யா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் தினமும் லாவண்யாவிற்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது .
இதுகுறித்து லாவண்யா கடந்த 3 மாதத்திற்கு முன்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோரி தற்போது கை குழந்தை மற்றும் பெற்றோருடன் மீண்டும் மனு அளித்துள்ளார். மேலும் கஞ்சா போதை ஆசாமி ஆடை கழட்டி ஆபாசமாக பொது தெருவில் நடந்துகொள்ளும் வீடியோ சிசிடிவி காட்சிகளும் பொதுமக்களும் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ,உடனடியாக போதை ஆசாமியை கைது செய்ய வேண்டுமென லாவண்யா மீண்டும் புகாரை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.