Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பல்லாவரத்தில் கஞ்சா ஆயில் விற்பனை : இருவரை கைது செய்த போலீஸ்..!

தமிழகம்

பல்லாவரத்தில் கஞ்சா ஆயில் விற்பனை : இருவரை கைது செய்த போலீஸ்..!

பல்லாவரத்தில் கஞ்சா ஆயில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 350 எம்.எல் கஞ்சா ஆயில் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் சந்தையில் கள்ளதனமாக கஞ்சா ஆயில் விற்பனை செய்யபட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் சாலினி தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சந்தை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்க்கு இடமாக வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிளித்துள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது 350 எம்.எல் கஞ்சா ஆயில் டப்பாக்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்,

பின்பு அவர்களிடம் நடத்திய விசாரனையில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரித்திக் (22) கடந்த 2019ம் வருடம் கல்லூரியில் படிக்கும் பொழுது மாணவர்களுக்கு கஞ்சா விற்றதால் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு சென்று வந்தது தெரியவந்தது.

மற்றொரு நபர் சி.ஐ.டி நகரை சேர்ந்த ராகவன் (22) என்பதும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும் இருவரும் சேர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா ஆயிலை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இருசக்கர வாகனத்துடன் இருவரையும் பிடித்த மதுவிலக்கு போலீசார் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top