Connect with us

Raj News Tamil

குளிர்சாதன பெட்டியில் வாயு கசிவு: தனியார் வங்கியின் ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

தமிழகம்

குளிர்சாதன பெட்டியில் வாயு கசிவு: தனியார் வங்கியின் ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள (குளோபல் இன்ஃபோ சிட்டி ) தனியார் வளாக கட்டிடத்தில் (ஆக்சிஸ் பேங்க்) தனியார் வங்கி செயல்பட்டு வந்து இருக்கிறது.

இதில் நேற்று இரவு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது குளிர்சாதன இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு வாயு கசிந்து உடலுக்கு ஒவ்வாது ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக அப்பொழுது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த 14 ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் போன்றவை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த காவலாளிகள் அவர்களை மீட்டு வங்கிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top