Connect with us

Raj News Tamil

22 வருடங்களுக்கு பிறகு! ஜெமினி 2 அப்டேட்? விக்ரம் தந்த ஷாக்!

சினிமா

22 வருடங்களுக்கு பிறகு! ஜெமினி 2 அப்டேட்? விக்ரம் தந்த ஷாக்!

நடிகர் சீயான் விக்ரம், தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், என் மீதான அன்பை வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி என்றும், இன்னும் சில தினங்களில் சுவாரசியமான அப்டேட் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஓ போட மறந்துடாதீங்க என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த விக்ரமின் ரசிகர்கள், இது ஜெமினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த யூகம் உண்மையாகும் பட்சத்தில், 22 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top