Connect with us

Raj News Tamil

வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர்.. கொலை செய்த பெண்..

தமிழகம்

வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர்.. கொலை செய்த பெண்..

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமடை பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா. கணவர் இல்லாமல் இருக்கும் இவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்த காஞ்சனா, கடந்த 6 மாதங்களாக வாடகை பணத்தை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த வீட்டின் உரிமையாளர் விஜயா, இன்னும் சில நாட்களுக்குள் வாடகை பணத்தை செலுத்த வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். பணத்தை திரட்ட முடியாமல் தவித்த காஞ்சனா, இறுதியில் விபரீத முடிவை கையில் எடுத்தார்.

அதாவது, விஜயாவை கொலை செய்துவிட்டால், வாடகை செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்றும், விஜயா சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகைகளை நாமே எடுத்துக் கொள்ளலாம் என்றும், காஞ்சனா திட்டம் தீட்டினார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது கள்ளக்காதலன் ஞானவேலுவை கூட்டு சேர்த்துக் கொண்டு அவர், விஜயாவின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தார்.

இதையடுத்து, அந்த கிராமத்தில் இருந்த வனப்பகுதியில் வைத்து, விஜயாவை உடலை பெட்ரோல் ஊற்றி, இருவரும் எரித்துவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top