Connect with us

Raj News Tamil

2 மாதங்களில் கள்ளக்காதல்.. குழந்தையை தவிக்கவிட்டு காதலன் உடன் ஓட்டம்.. காத்திருந்து கொலை செய்த அண்ணன்கள்..

தமிழகம்

2 மாதங்களில் கள்ளக்காதல்.. குழந்தையை தவிக்கவிட்டு காதலன் உடன் ஓட்டம்.. காத்திருந்து கொலை செய்த அண்ணன்கள்..

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு ராகிணி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், வசந்தின் மனைவி ராகிணிக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த வசந்தும், ராகிணியின் அண்ணன்கள் 2 பேரும், அவரை கண்டித்துள்ளனர். இருப்பினும், முறையற்ற உறவை கைவிடாத அந்த பெண், வீட்டில் இருந்து வெளியேறி, ரெட்டைஏரி பகுதியில் தனியாக வீடு எடுத்து, தனது காதலன் உடனே, வசித்து வந்தார்.

இதனால், கடும் கோபம் அடைந்த வசந்தும், ராகிணியின் அண்ணன்கள் இருவரும், சுதாசந்தரை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த 31-ஆம் தேதி அன்று, காதல் ஜோடியினர் இருவரும், பைக்கில் தனியாக வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அவர்கள், சுதாசந்தரை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக் என்ற ஆட்டோ டிரைவரையும், ராகிணியின் அண்ணன்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராகிணியின் கணவர் வசந்தையும், வசந்தின் தந்தை வாசுதேவனையும், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top