கடவுள் என் பக்கம் இருந்தார்: டொனால்ட் ட்ரம்ப்!

கடவுள் என் பக்கம் இருந்தான் என்று துப்பாக்கிச் சூடு தாக்குலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாத்தில் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், நூலிழையில் அவர் உயிர்தப்பினார்.

தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், அவர் குணமடைந்து, மீண்டும் தேர்தல் பிரசாத்தில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் பேசுகையில், இன்றிலிருந்து 4 மாதங்களில் நாம் வியத்தகு வெற்றியைப் பெற்றிருப்போம். அப்போது நான் பாதி தேசத்துக்கு அல்ல ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கான அதிபராக இருப்பேன். பாதி அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

அன்றைய தினம் நான் எனது தலையை லேசாக திருப்பியிருக்காவிட்டால் கொலையாளியின் புல்லட் மிகத் துல்லியமாக என் மீது பாய்ந்திருக்கும். இன்று இந்த இரவில் நான் உங்களுடன் இப்படி நின்றுகொண்டிருக்க மாட்டேன். இன்று நான் இங்கே நிற்க எல்லாம் வல்ல இறைவனின் அருளே காரணம். அது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். என்னைச் சுற்றி ரத்தமாக இருந்தபோதும் நான் அந்த நொடியில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனெனில் கடவுள் என் பக்கம் இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News