அஜித், த்ரிஷா, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. கடந்த 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.
ஆனால், ரசிகர்களின் ஆதரவால், இப்படம் அதிக வசூலை குவித்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 14 நாட்களில், 248 கோடி ரூபாயை, இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.
இது, மிகப்பெரிய வசூலாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்று கூறப்படுவதால், முதலீடு செய்த பணத்தையே, படக்குழுவினர் வசூலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.