தமிழகம்
இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி: கமல்ஹாசன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய் வழியாக கடந்து மாதம் 30-ஆம் தேதி செவ்வாய் இரவு அமெரிக்கா புறப்பட்டு நிலையில்,18 நாட்கள் பிறகு அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வருகின்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளரை சந்தித்த போது,
தக் லைப் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்று இருந்தேன் இப்பொழுது அதை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளேன்.
இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திப்பேன். நாடாளுமன்ற பணியில் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது நல்ல வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.
கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பேன் என கூறிவிட்டு சென்றார்.