“நரேந்திர மோடிக்கு குட்பை” – ராகுல் காந்தியின் அதிரடி ட்வீட்!

இந்தியாவின் பிரம்மாண்ட ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து தற்போது வரை, 6 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்டன.

வரும் 1-ஆம் தேதியோடு, 7-வது கட்ட தேர்தலும் முடிக்கப்பட்டு, வரும் ஜூன் 4-ஆம் தேதி அன்று, தேர்தல் முடிவுகள் வழங்கப்பட உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வரும் பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்குமா? அல்லது பலத்த தோல்விக்கு பிறகு, இந்த முறையாவது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்று பல்வேறு கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு, பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கு குட்பை, டாட்டா.. பொதுமக்களை ஏமாற்றும் இந்த போலிக்கு, இன்னும் 7 நாட்கள் மட்டும் தான் உள்ளன.

இண்டியா கூட்டணி தொடர்ச்சியாக வாக்குகளை பெற்று வருகிறது – சத்தமாகவும், தெளிவாகவும்.. இந்த நாடு பாஜகவிடம் இருந்து சுதந்திரம் அடையும், நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் என்பது மிகவும் விரைவில் வர உள்ளது” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News