சினிமா
அரசு பேருந்து விபத்து – காயம் அடைந்த 54 பேருக்கு எம்.எல்.ஏ ஆறுதல்!
மணப்பாறை அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை, அப்பகுதி எம்.எல்.ஏ சந்தித்து, ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் பகுதியில், காரும் அரசு பேருந்தும் மோதி, சமீபத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் பயணம் செய்த 54 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த விபத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை தொடர்பாகவும், மருத்துவர்களிடம் விசாரித்தார்.
You must be logged in to post a comment Login