Connect with us

Raj News Tamil

பழுதாகி நின்ற அரசு பேருந்து: தள்ளி விட்ட பள்ளி மாணவர்கள்!

தமிழகம்

பழுதாகி நின்ற அரசு பேருந்து: தள்ளி விட்ட பள்ளி மாணவர்கள்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் வழியாக முதலிபாளையம் சிட்கோ வரை செல்லும் அரசு பேருந்து A12/7 நேற்று மாலை சிட்கோவில் இருந்து மீண்டும் பழைய பேருந்து நிலையம் வரும்பொழுது காங்கேயம் ரோடு சிடிசி பகுதியில் பழுதாகி நின்றது.

பேருந்து சுமார் 45 நிமிடங்கள் மேலாக ரோட்டிலேயே நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போக்குவரத்து காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்து பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், போக்குவரத்து காவலர் என அனைவரும் சேர்ந்து பேருந்தை சாலையின் ஓரமாக தள்ளி நிறுத்தினர்.

மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாற்று பேருந்தில் மீண்டும் பழைய பேருந்து நிலையம் சென்றனர். இதனால் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகினர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More in தமிழகம்

To Top