தமிழகம்
“தடுப்பு சுவர் மீது மோதி அரசு பேருந்து விபத்து” – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
புதுச்சேரி அருகே, தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள், காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி, அரசு பேருந்து ஒன்று, கடந்த சனிக்கிழமை அன்று, சென்றது. லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை அருகே பேருந்து வந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
இதனால் நிலைத்தடுமாறிய பேருந்து ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல், வண்டியை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் பேருந்து மோதி, விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த எந்தவொரு பயணிகளுக்கும், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகி, காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
You must be logged in to post a comment Login