Connect with us

Raj News Tamil

தங்க சங்கிலியை பறித்து: 100 கிலோ மீட்டர் வேகத்தில் தப்பிய காதல் ஜோடி!

Trending

தங்க சங்கிலியை பறித்து: 100 கிலோ மீட்டர் வேகத்தில் தப்பிய காதல் ஜோடி!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி தொடர்ந்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.

காதலன் ஸ்கூட்டரை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் காதலி பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலிகளை பறிக்க அந்த காதல் ஜோடி வேகமாக ஸ்கூட்டரில் சென்று மாயமாகி விடுகிறது.

அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் மீண்டும் அந்த காதல் ஜோடி நலகொண்டா மாவட்டத்தில் உள்ள எரகண்ட் பள்ளி கிராமத்தில் பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவர தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஸ்கூட்டரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்கள்.

அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அதே வேகத்தில் அந்த காதல் ஜோடியை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.

இந்த நிலையில் இது பற்றி கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து அந்த காதல் ஜோடியின் படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் காதலர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கச் சங்கிலிகளை பறித்து கொண்டு ஸ்கூட்டரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் தப்பிச்செல்லும் காதல் ஜோடியை பிடிக்க நலகொண்டா மாவட்ட போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

More in Trending

To Top