Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

“பணம் தரியா.. இல்லையா” – பாட்டியை கொலை செய்த பேத்தி!

தமிழகம்

“பணம் தரியா.. இல்லையா” – பாட்டியை கொலை செய்த பேத்தி!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. 55 வயதாகும் இவர், கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பித்தளை தவளையில் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வமணியின் பேத்தி ஜெயலட்சுமி, காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, ஜெயலட்சுமி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், நடந்த உண்மை அனைத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:-

“என்னுடைய தாய் கீதா வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாயை, என்னுடைய பாட்டிக்கும், எனக்கும் செலவுக்காக அனுப்புவார். அந்த பணத்தை இந்த மாதமும் அனுப்பி வைத்தார். அந்த பணத்தில், என் செலவுக்காக பணத்தை கேட்டேன். ஆனால், என் பாட்டி எனக்கு தரவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்து, அவரை கீழே தள்ளிவிட்டேன். அதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர், அவரது உடலை பித்தளை தவளையில் மறைத்துவிட்டு, எனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன்.

பின்னர், பாட்டியை பார்ப்பதுபோல் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு, அவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன். மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக காவல்துறையினர் நினைப்பார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், விசாரணையில் சிக்கிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். செலவுக்கு பணம் தராத பாட்டியை, பேத்தியே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top