Connect with us

Raj News Tamil

ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத்!

விளையாட்டு

ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத்!

ஐபிஎல் தொடரின் 24-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸை- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டம் மழை காரணமாக 10 நிமிஷங்கள் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், பட்லர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன்- ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர்.

ரியான் பராக் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர் 13 ரன்கள் சேர்த்தார்.

சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.

நிதனமாக விளையாடிய சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மேத்யூ வேட் (4), அபினவ் மனோகர் (1), விஜய் ஷங்கர் (16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கில் மட்டும் நிதனமாக ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 44 பந்துகளில் 72 ரன்கள்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராகுல் திவேட்டியா, ரஷீத் கான் இணைந்து அதிரடியாக விளையாடினர்.

இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் அவேஷ் கான் வீசினார். இதில் ரஷித் கான் 3 பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

11 பந்துகளை எதிர்கொண்ட ரஷித் கான் 24 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top