Connect with us

Raj News Tamil

“FIR போடணும்.. யார் மேல.. என் மேல தான் FIR போடணும்” – ஷாக் தந்த நபர்!

இந்தியா

“FIR போடணும்.. யார் மேல.. என் மேல தான் FIR போடணும்” – ஷாக் தந்த நபர்!

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் தோஷி. இவர் தனது மனைவியுடன், காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தோஷியின் மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, காவல் நிலையத்திற்கு சென்ற தோஷி, புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தன்னுடைய கவனக்குறைவால் தான் விபத்து நடந்துள்ளது என்றும், எனவே தன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால், காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More in இந்தியா

To Top