கனரா வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்

நாட்டின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி அதன் யூசர்நேமை மாற்றியுள்ளனர்.

இது தொடர்பாக கனரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்திற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த பக்கத்தை மீட்க எக்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இந்த பிரச்னை சரி செய்யப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும். அதுவரை எந்த தகவலையும் எக்ஸ் பக்கத்தில் அளிக்க வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News