4-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து! மக்களை சிலிர்ப்பூட்டிய முதல் மந்திரியின் பதிவு!

திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார்.அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடியதாக தெரிகிறது. அப்போது சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்ட முதல்-மந்திரி மாணிக் சாஹா, ஆகஸ்டு 6-ந் தேதியான நேற்று சிறுமி ஸ்ரீஅதிதா தாசுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், குமார்காட்டில் இருந்து அகர்தலாவுக்கு திரும்பும் வழியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாசிடம் பேசினேன். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அறிந்தேன். ஸ்ரீஅதிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

Recent News