Connect with us

Raj News Tamil

4-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து! மக்களை சிலிர்ப்பூட்டிய முதல் மந்திரியின் பதிவு!

இந்தியா

4-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து! மக்களை சிலிர்ப்பூட்டிய முதல் மந்திரியின் பதிவு!

திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார்.அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடியதாக தெரிகிறது. அப்போது சிறுமி தனது பிறந்தநாள் ஆகஸ்டு 6-ந் தேதி என்று குறிப்பிட்டார். இதை கவனத்தில் கொண்ட முதல்-மந்திரி மாணிக் சாஹா, ஆகஸ்டு 6-ந் தேதியான நேற்று சிறுமி ஸ்ரீஅதிதா தாசுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், குமார்காட்டில் இருந்து அகர்தலாவுக்கு திரும்பும் வழியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாசிடம் பேசினேன். இன்று அவளுடைய பிறந்தநாள் என்று அறிந்தேன். ஸ்ரீஅதிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவளுடைய பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top