இந்தியா
ஹரியானா ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை
இந்திய தேசிய லோக்தளத்தின் ஹரியானா மாநிலப் பிரிவுத் தலைவர் நஃபே சிங் ரதீ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் நஃபே சிங் ரதி, பயணம் செய்து கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நஃபே சிங் உயிரிழந்தார்.