ஹரியானா மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பு

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அம்மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பாணை செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் செப்டம்பர் 12-ம் தேதி ஆகும். செப்டம்பர் 13-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு செப்டம்பர் 16-ம் தேதி கடைசி நாள்.

அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News